தடையை மீறி பட்டாசு வெடித்த மக்கள்: டெல்லியில் காற்றின் தரம் கடும் சரிவு https://ift.tt/4q8sPrd

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தடையை மீறி மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது.டெல்லியின் குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாக குறைந்தது.

காற்றின் தரத்தை அளக்கு அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது.
இருப்பினும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லியில் கடந்த 4 தீபாவளிகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்றின் தரம் பரவாயில்லை என்றே கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 2020ல் டெல்லியில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றின் தரம் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2018ல் 281 ஆகவும் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD