மின் கட்டண மோசடி: ரூ.1.29 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் https://ift.tt/ERtHhKS

பஞ்ச்குலா: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நகரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் குர்கிரத் சிங் (62). இவரது மொபைல் போனுக்கு அக்.16-ம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், கடந்த மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. உடனடியாக கட்டணத்தை செலுத்தாவிட்டால் இன்றிரவே மின்சாரம் துண்டிக்கப்படும். உடனே இந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பதற்றமடைந்த குர்கிரத் சிங் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர் மின்துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஏற்கெனவே மின் கட்டணத்தை செலுத்தியதாக கூறிய ராணுவ வீரரிடம் குயிக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக