ஷிரத்தாவின் உடல் உறுப்புகளை அகற்றும்போது ஆதாரங்களை விட்டுவிடாமல் இருக்க அப்தாப் கவனமாக செயல்பட்டுள்ளார் - டெல்லி போலீஸார் https://ift.tt/e27gAEU
புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் (28). இவரது காதலி ஷிரத்தா வாக்கர் (26). இவர்கள் இருவரும் டெல்லியில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஷிரத்தாவை கொலை செய்த அப்தாப், உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு டெல்லியில் உள்ள வனப்பகுதியில் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், அப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், அப்தாப் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி போலீ ஸார் கூறியதாவது: அப்தாப், ஷிரத்தா வசித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தெருக்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவானவற்றை ஆராய்ந்தோம். அவர்கள் தங்கியிருந்த சத்தர்பூர் பஹாடி பகுதியில் அமைந்துள்ள சுமார் 150 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் கிடைத்த வீடியோ பதிவில் அப்தாப், தனது வீட்டிலிருந்து காலை 4 மணிக்கு வெளியே வருவது தெரிய வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக