லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் https://ift.tt/imSDtFB

புது டெல்லி: உடலில் காய்ச்சல், சளி ஏற்படும்போது மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கணிசமான இந்தியர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவர்கள் லேசான காய்ச்சல் ஏற்படும்போது தேவைக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில், தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டும். கம்யூனிட்டி அக்யூயர்டு நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், ஹாஸ்பிடல் அக்யூயர்டு நிமோனியாவுக்கு 8 நாட்களுக்கும் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். கண்காணிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் எம்பரிக் ஆன்டிபயாடிக் சிகிச்சை, தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை