காரைக்குடி | ஆசிரமத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலி சாமியார் உட்பட இருவர் கைது https://ift.tt/krstEMb
காரைக்குடி: திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் மானகிரி பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வருகிறார். இந்நிலையில், அவரிடம் குடும்ப பிரச்சினைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளராக பணிபுரியும் 35 வயது பெண் ஒருவர் குறி கேட்கச் சென்றார்.
அப்போது அந்த பெண்ணுக்கும், சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனது 10 வயது மகனையும், 8 வயது மகளையும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்தில் அச்சிறுமிக்கு சாமியார் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை மாவட்ட எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக