பாரத் பயோடெக், பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு https://ift.tt/ndANIgq
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. அதிகபட்சமாக பயோலாஜிகல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன.
பயோலாஜிகல் இ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் விக்ரம் பரத்கர் கூறுகையில், “நாங்கள் 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களைத் தயாரித்தோம். இவற்றில் 10 கோடி டோஸ்களை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு வழங்கினோம். மீதம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஆர்டர் கிடைத்ததும் உடனே அனுப்பும் வகையில் அவை தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக