மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 345 பவுன் தங்க நகைகள் பறிமுதல் https://ift.tt/y0nKgZv
மேல்மருவத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த இரு நபர்களை பிடித்து அவர்களது உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அவர்களது பையை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் ஜெயின் மற்றும் அபிலேஷ் என்பதும் நகைப்பட்டறை வைத்துள்ளதும் பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட சுமார் 2,760-கிராம் எடையுள்ள 345 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக