சிறுமியை கடத்திசென்று திருமணம் செய்த வழக்கில் சென்னை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/d0XAK1T
புதுச்சேரி: சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் சென்னை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் விதித்தார்.
புதுச்சேரி, வில்லியனூர் கணுவாபேட்டை புது நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சென்னை நொச்சிக்குப்பம் விஜி என்ற விஜய் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தந்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் விஜி என்கிற விஜய், இவரது தாய் லதா ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையின்போது கடத்தி செல்லப்பட்ட சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததால் விஜய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக