குஜராத் கலவரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு https://ift.tt/0p9fzSt
கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்டுகள் கழித்து முகேஷ் பர்வாத், கில்லோல் ஜானி, அசோக்பாய் படேல், நிரவ்குமார் படேல் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக