முஸ்லிம்களுடன் மீண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு - காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை https://ift.tt/G2aE5w8
புதுடெல்லி: டெல்லியில் முக்கிய முஸ்லிம் தலைவர்களுடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின்(ஆர்எஸ்எஸ்) தலைவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த ஜனவரி 14 -ம் தேதி இக்கூட்டம், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநரான நஜீப்ஜங் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் அனுமதியின் பேரில் அதன் முக்கிய நிர்வாகிகளான இந்திரேஷ்குமார், ராம் லால் மற்றும் கிருஷ்ண கோபால் தாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக