பழமையான மொழி தமிழ் என்ற கர்வம் வேண்டும் - ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/UZx1Jz2

புதுடெல்லி: நாடு முழுவதும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடன் ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘‘நமது தமிழ்மொழிதான் உலகின் மிகவும் பழமையான மொழி. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டாமா? இது நம் நாட்டில் இருக்கும் பெரிய சொத்து, கவுரவம்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

நாடு முழுவதிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் ‘பரிட்சா பே சர்ச்சா'(தேர்வும் தெளிவும்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், 6-வது ‘பரிட்சா பே சர்ச்சா' நிகழ்ச்சி டெல்லி டால்கட்டோரா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நாடு முழுவதிலும் இருந்து காணொலி வாயிலாகவும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD