விருதுநகர் | கோயிலில் பலியிட வன விலங்குகளை வேட்டையாடிய கிராமத்தினர் - 30 முயல்கள், கீரிகள் பறிமுதல் https://ift.tt/03v4Yqt
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோயிலில் பலியிடுவதற்காக காட்டுப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய கிராம மக்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட 30 முயல்கள், 3 கீரிகள், ஒரு அணில் மற்றும் ஒரு கௌதாரி ஆகியவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புதூர், கருத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் சிவராத்திரியை முன்னிட்டு காளியம்மன் கோயிலில் வன விலங்குகளை வேட்டையாடி படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதேபோன்று, இந்த ஆண்டும் இன்று (22ம் தேதி) காளியம்மன் கோயிலில் வன விலங்குகளை பலியிடுவதற்காக சாத்தூர், ஆர்.ஆர். நகர் பகுதிக்கு 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக