ஆப்கன் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை: தலிபான்கள் உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்ட்மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அது முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அவர்கள் கொண்டு வந்தபடி உள்ளனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர்.
“முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் உருவாக்கியதுதான் கருத்தடை சாதனங்கள். இவற்றை இனி பெண்கள் பயன் படுத்தக் கூடாது. மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்க கூடாது” என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டன் நாளிதழான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக