அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து https://ift.tt/j6g5XsF
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மாணவர்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். இது அரசின் கடமை ஆகும்.
ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது நீதிமன்றத்தின் கடமை ஆகும். நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக