சென்னை | அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது https://ift.tt/y5QA8BG
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(37) சென்னைமாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 19-ம் தேதி தடம் எண்.119ஜி பேருந்தில் ஓட்டுநர் பணியிலிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்டதகராறில் அந்த நபர் வினோத்குமாரை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து தரமணி போலீஸார் விசாரணை நடத்தி டிரைவரைத் தாக்கியதாக பாலாஜி (26) என்பவரை கைது செய்தனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக