17 போர்க் கப்பல்கள் வாங்க உள்நாட்டு நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடிக்கு ஒப்பந்தம் https://ift.tt/eHiw1CU
புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கடற்படைக்கு தேவையான 17 கப்பல்கள் வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு ராணுவ தள வாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய இலக்குகளை வலுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படைக்குத் தேவையான 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 நவீன ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத் தானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக