'நாகநதிக்கு புத்துயிர் அளித்த தமிழக பெண்கள்' - 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/eNAhpZ4
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நாகநதிக்கு புத்துயிர் அளித்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
கடந்த 2014 மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதே ஆண்டு அக்.3-ம் தேதி முதல்முறையாக ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. அது முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு வானொலியில் ஒலிபரப்பானது. நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் கேட்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையின் தலைமை அலுவலகம், தூதரக அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக