ம.பி. என்கவுன்ட்டரில் பெண் மாவோயிஸ்ட்கள் 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/taC5Viw
போபால்: மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டம் கட்லா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். நேற்று அதிகாலை, கட்லா வனப்பகுதியில் மத்தியபிரதேச மாநில சிறப்பு போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்ட்டரில் 2 பெண் மாவோயிஸ்ட்கள் உயிரிழந் தனர். ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீஸார் அறிவித்துள்ளனர். அவர்கள் சுனிதா, சரிதா காதியா மோச்சா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக