குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது வழக்கு https://ift.tt/E7mbXWO
அகமதாபாத்: குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி' சமூகத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து பிஹார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக