டெல்லி மேயர் பதவியை மீண்டும் தக்கவைத்தது ஆம் ஆத்மி - கடைசி நேரத்தில் பாஜக வாபஸ் https://ift.tt/PwBTmLK

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் (எம்சிடி), மேயர் பதவிக்காக ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த மேயர்பதவி, முதல் வருடம் மகளிருக்காகவும், மூன்றாவது வருடம் பட்டியல் இனத்தவருக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதர மூன்று வருடங்களும் பொதுப் பிரிவினருக்கானது. இங்கு தனி மெஜாரிட்டியான ஆம் ஆத்மி கடந்த வருட மகளிருக்கான மேயர் பதவியை வென்றிருந்தது.

பொதுப்பிரிவினருக்கான இந்தமுறையும் ஆம் ஆத்மி அதே வேட்பாளர்களை நிறுத்தியது. மேயராக ஷெல்லி ஓபராயும் துணை மேயராக ஆலே முகம்மதுவும் மீண்டும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் சிக்‌ஷா ராய் மேயர் பதவிக்கும், சோனி பாண்டே துணை மேயருக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசிநேரத்தில் ஆம்ஆத்மியின் 2 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால், போட்டியின் முடிவு கணிக்க முடியாமல் இருந்தது. எனினும், கடைசிநேரத்தில் பாஜகவின் 2 வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால், ஆம் ஆத்மியினர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD