இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கு அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி https://ift.tt/iy7rqt0
புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத் (உ.பி.), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.) மனோகர் லால் கட்டார் (ஹரியாணா) உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக