அடுத்த பெருந்தொற்று கரோனாவை விட மிகவும் மோசமானதாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை https://ift.tt/PWsTwYV
புதுடெல்லி: அடுத்த பெருந்தொற்று கரோனா வைரஸை விட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் பேசியதாவது: கரோனா வைரஸின் சர்வதேச சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இதன் மூலம் கரோனா வைரஸின் சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. மேலும் ஒரு பெருந்தொற்று உருவாகி வருகிறது. இந்த பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக