மணிப்பூரில் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு https://ift.tt/Yea4Joc

புதுடெல்லி: மணிப்பூரில் வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள வணிகர்கள் ஏப்ரல் மாதத்திற்கான கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3பி மற்றும் ஜிஎஸ்டிஆர்-7 ஆகிய பிரிவுகளில் மாதாந்திர ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை இம்மாதம் இறுதி வரை அதாவது மே 31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐசி உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD