பணகள தலமயல 1200 பர சறறவளதததல மணபபரல கத சயத 12 பர வடவததத ரணவம https://ift.tt/rXRH6N5
இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 12 பேரை விடுவிக்க கோரி பெண்கள், குழந்தைகள் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அவர்களை ராணுவம் விடுவித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்தபடி உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக