மமபயல கரன சகசச கள மரததவமன ஒபபநதததல ஊழல - ஆததய தககர நணபரகள வடகளல சதன https://ift.tt/0lAi721
மும்பை: மும்பையில் கரோனா சிகிச்சைக்கான கள மருத்துவமனை ஒப்பந்தத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களில் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது, அதற்கான சிகிச்சைகளை அளிக்க மும்பையின் பல இடங்களில் கள மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தங்கள் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதித்ய தாக்கரேவின் நண்பர் சூரஜ் சவான், சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் சுஜித் பட்கர், அவரின் பங்குதாரர்கள் ஹேமந்த் குப்தா, சஞ்சய் ஷா, ராஜூ சலுங்கே ஆகியோர் ‘லைப்லைன் ஹாஸ்பிடல் மேஜேன்மென்ட் சர்வீசஸ்’(எல்எச்எம்எஸ்) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இது பதிவு செய்யப்படாத நிறுவனம். சுகாதார சேவையில் இந்நிறுவனத்துக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. ஆனாலும், கரோனா கள மருத்துவமனை மற்றும் சிகிச்சை தொடர்பான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் தொடர்ந்து பெற்றுவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக