மணபபரல தபபகக சணடயல பதறறம நடபப - அனதத கடசகளடன அமதஷ ஆலசன https://ift.tt/vepLwiY
புதுடெல்லி: மணிப்பூரில் 2 மாவட்டங்களில் துப்பாக்கிச் சண்டை தொடரும் சூழலில், பாதுகாப்புப் படையினர் மீது அடையாளம் தெரியாத கும்பல் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிது. இந்நிலையில், மணிப்பூரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமுதாயத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூரில் உள்ள குகி மற்றும் நாகா பழங்குடியினர் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமைப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது, மணிப்பூரில் வீடுகள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டன. தற்போது வரை கலவரம் ஓயவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக