எதரககடசகள கடடததல தறமயக தலயடட ஆம ஆதம - கங. மதல மடதத மமதவகக பரடட https://ift.tt/X5PYurO
புதுடெல்லி: காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள்நேற்று முன்தினம் பாட்னாவில் கூடினர். இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பான தனது தனிப் பிரச்சினையை எழுப்பினார். இதில், காங்கிரஸின் முடிவை அறிவது அவரது நோக்கமாக இருந்தது. அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க தாங்கள் எடுத்த முயற்சிக்கு பலனில்லை என்று கூறி, கேஜ்ரிவால் வாக்குவாதத்தை தொடங்கினார். அப்போது இதற்கான பதிலை தங்கள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளிப்பார் என ராகுல் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக