ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸார் தாக்குதல்: பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் புகார் https://ift.tt/ckPremX
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி மணிப்பூர் வன்முறைக்கு ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, “நம் மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்றார். அடுத்த சில மணி நேரங்களில் அரசுக்கு எதிராக குறை கூறிய அமைச்சர் குதா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலையில் சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பு, “என்னிடம் உள்ள சிவப்பு டைரியில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை சட்டப்பேரவையில் தெரிவிப்பேன்” என கூறியிருந்தார். பின்னர் அவை கூடியதும், ராஜேந்திர சிங் குதா சிவப்பு டைரியுடன் பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தன்னுடைய அறைக்கு வந்து பேசுமாறு ஜோஷி தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து பேரவை விவகாரத் துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் அருகே சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக