40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது - மக்கள் நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு https://ift.tt/MiWdZhB
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென் துருவத்தில் நாளை மாலை தரையிறங்க உள்ளது. இதை பொதுமக்கள் நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு, பூமியை சுற்றிவந்த விண்கலம் கடந்த ஆக.1-ல்புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. ஆக. 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக