புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/bHMAWEN
புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதியப் பாடத்திட்டங்கள் தயாராகிவிட்டதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024-ம்கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இனி பள்ளி பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். தற்போது ஆண்டுக்கு ஒரு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள்அதிக பாடச் சுமையை எதிர்கொள்கின்றனர். பாடச் சுமையை குறைக்கும் வகையில், பொதுத்தேர்வுகள் ஒரே தேர்வாக இல்லாமல், இரண்டு செமஸ்டர்களாக நடத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக