அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: விசாரணை நிறைவடைந்துவிட்டதாக செபி தகவல் https://ift.tt/Utzv0K8
புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமங்களின் 24 விவகாரங்களை ஆய்வு செய்ததாகவும், அவற்றில் 22 விவகாரங்கள் மீதான ஆய்வு நிறைவு பெற்றுவிட்டதாகவும் செபி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக