மாணவர் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம்: உ.பி. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு https://ift.tt/zPlATMN
லக்னோ: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் நேகா பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியை திருப்தா தியாகி என்ற பெண் ஆசிரியை நடத்தி வருகிறார். இவர் மாற்றுத் திறனாளி ஆவார்.
கடந்த 24-ம் தேதி ஆசிரியை திருப்தா தியாகி, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது 7 வயது சிறுவனிடம் அவர் கணித வாய்ப்பாடு சொல்லுமாறு கூறினார். அந்த சிறுவனால் வாய்ப்பாட்டை சரியாக சொல்ல முடியவில்லை. ஆத்திரமடைந்த ஆசிரியை, சக மாணவர்களை அழைத்து அந்த மாணவரை கன்னத்தில் அறையுமாறு கூறினார். இதன்படி சக மாணவர்கள், வாய்ப்பாடு கூற முடியாத மாணவரின் கன்னத்தில் அறைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக