ஜாமீன் மனு தள்ளுபடி - சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி https://ift.tt/eDJ62gO
விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2018-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக கூறி, சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அவருக்கு 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக