6-ம் நாள் திருப்பதி பிரம்மோற்சவம் | அனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி: தங்க தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு https://ift.tt/mPV4c9J
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும், மாலை தங்க தேரிலும், இரவு யானை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக