நாடாளுமன்றத்தில் வெறுப்புப் பேச்சு: எம்.பி ரமேஷ் பிதுரியை விசாரிக்க பாஜக பரிந்துரையால் சிறப்புரிமைக் குழு https://ift.tt/0kLGohf

புதுடெல்லி: பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு குழுவை அமைக்க பாஜகவும் பரிந்துரை செய்துள்ளது எனத் தெரிகிறது.

பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, 14 பேர் கொண்ட சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுனில் குமார் சிங் உட்பட 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். "வெறுப்பு பேச்சு தொடர்பான அனைத்து புகார்களையும் சிறப்புரிமைக் குழு ஆய்வு செய்யும்" என்று மக்களவை செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD