சனாதனத்தை அழிக்க காங்கிரஸ் முயற்சி: போபால் பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு https://ift.tt/dQw8fD5

போபால்: பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடியான தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தொண்டர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக நீண்ட காலம் ஆட்சி நடத்தியது. ஆனால் ஊழல் ஆட்சியால் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. யுபிஐ திட்டம் கொண்டு வரப்பட்டபோது மிகக் கடுமையாக விமர்சித்தது. இப்போது யுபிஐ பணப் பரிமாற்றத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மோடி என்றால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அர்த்தம். பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அந்த கட்சி ஆட்சியில் இருக்கும்வரை வறுமை ஒழிக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD