ஆந்திரா ரயில் விபத்து | 12 ரயில்கள் ரத்து - ரயில்வே தகவல் https://ift.tt/8mkgLlS

சென்னை: ஆந்திர மாநிலத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ரயில் தடத்தில் செல்லும் ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது கிழக்கு கடற்கரை ரயில்வே.

இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிஸ்வஜித் சாஹூ தெரிவித்தது. “விபத்தை அடுத்து 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ரயில்கள் மாற்று தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. 7 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் சம்பவ இடத்தில் சிக்கித் தவிக்காமல் இருக்க பேருந்து ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரயில் தடங்களை ஓரளவு மீட்டு விட்டோம். முதற்கட்ட தகவலின்படி நின்றிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயிலுக்கான சிக்னல் சார்ந்த குளறுபடி காரணம் என சொல்லப்படுகிறது. ரயில்வே சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD