தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்கு பதிவு https://ift.tt/1i30f9o
மும்பை: ரூ.20 கோடி கேட்டு தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.20 கோடி கேட்டு கடந்த 27-ம் தேதி சதாப் கான் என்ற பெயரில் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு ரூ.20 கோடி கொடுக்காவிட்டால் உங்களை (முகேஷ் அம்பானி) கொலை செய்வோம். நாட்டில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக