பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,300 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல் https://ift.tt/yu1Ga6V
புதுடெல்லி: ரூ.22,303 கோடி மதிப்பிலான உர மானியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியத்துக்கு ரூ.1.75 லட்சம் கோடி கடந்த பிப்ரவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரபி பருவ கால விவசாய பணிகளை மேற்கொள்ள ரூ.22,303 கோடி மதிப்பில் உரமானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ரபி பருவமான குளிர்காலத்தில் கோதுமை, பருப்பு, திணைகள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விவசாயிகள் பயிரிடுவர். இது நாட்டின் உணவு தானிய விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இருக்கும். இந்நிலையில் ரூ.22,303 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக