தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்: பிரதமரிடம் 41 தொழிலாளர்கள் நன்றி https://ift.tt/0Dmjs1X
புதுடெல்லி/ டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனைக்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமர் மோடியிடம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா அருகே சுரங்கப் பாதையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடந்த 12-ம் தேதி சுரங்கத்துக்குள் சிக்கினர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகளை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பிறகு, 41 பேரும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக