விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்: ராஜஸ்தானில் 70% வாக்குப் பதிவு https://ift.tt/fdYg0Ak

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 70% சதவீத வாக்குகள் பதிவாகின.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.25 கோடி. இந்த தேர்தலில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.70 லட்சத்துத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். இங்கு வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் உற்சாகத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD