விறுவிறுப்பாக நடந்த சட்டப்பேரவை தேர்தல் - ம.பி.யில் 71%, சத்தீஸ்கரில் 68% வாக்குப்பதிவு https://ift.tt/vKZR5dq
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைகளுக்கு நேற்று ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 70 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 71.16%, சத்தீஸ்கரில் 68.15% வாக்குகள் பதிவாகின.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக