உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை நெருங்கியது தேசிய பேரிடர் மீட்புக் குழு https://ift.tt/CUInY9K
உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் 51 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெருங்கிவிட்டனர். தொழிலாளர்கள் எந்நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மாநில சாலை மற்றும்போக்குவரத்து துறை மேற்கொண்டது. இங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால், சுரங்கப் பாதைக்குள் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இவர்களை மீட்கும் முயற்சி கடந்த 12 நாட்களாக நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக