‘தேசிய மொழி இந்தியை கற்றுக் கொள்ளுங்கள்’: டி.ஆர்.பாலுவுக்கு அறிவுரை கூறிய நிதிஷ்குமார் | இண்டியா கூட்டணி கூட்டத்தில் சலசலப்பு https://ift.tt/4bUNrDd
புதுடெல்லி: ‘‘இந்தி நமது தேசிய மொழி. நம் அனைவருக்கும் அந்த மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று, டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியது சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக