அமலாக்கத் துறை விசாரணையை தவிர்க்க டெல்லியில் இருந்து காரில் தப்பிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் https://ift.tt/ThzIstU
புதுடெல்லி: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை விசாரணையை தவிர்க்கும் வகையில் டெல்லியில் இருந்து தப்பினார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அமலாக்கத் துறைவட்டாரங்கள் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் பண மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது டெல்லி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார், வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக