ஜார்க்கண்டில் பயணிகள் மீது ரயில் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/Eg4X6Kt
ஜம்தாரா: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் இதுவரை இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
வித்யாசாகர் மற்றும் காசிதர் இடையே செல்லும் ரயில் (வண்டி எண் 12254, அங்கா எக்ஸ்பிரஸ்) புதன்கிழமை இரவு 7 மணி அளவில் கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே நின்றுள்ளது. அந்த ரயிலின் சங்கிலி இழுத்தப்பட்டுள்ள காரணத்தால் நின்றுள்ளது. இந்த சூழலில் அந்த வண்டியில் இருந்து பயணிகள் சில கீழ் இறங்கியுள்ளனர். அவர்கள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் இதுவரை இரண்டு பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதர பயணிகளின் நிலை குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதனை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக