மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் 6-வது சம்மனுக்கும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை https://ift.tt/IAWKH79
புதுடெல்லி: மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அண்மையில் 6-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர், துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை அளித்தார். அதன்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக