பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.75,021 கோடி சோலார் திட்டத்துக்கு ஒப்புதல் https://ift.tt/BydROxG

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.75,021 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. காரிப் பருவ விவசாயத்துக்கு ரூ.24,420 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘பிரதமரின் சூரிய வீடு: இலவசமின்சாரம்’ திட்டத்தை, பிரதமர் மோடி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த முன்வரும் 1 கோடி வீடுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை மானியம் அளிக்கப்படும். 1 கிலோவாட் திறன்உள்ள சோலார் பேனல் பொருத்துவோருக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியம் கிடைக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD