‘இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி’ - அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார். அப்போது இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டு அரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 கோடியில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சுவாமி நாராயண் கோயில் இன்று திறக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலை திறந்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக