சண்டிகர் மேயர் தேர்தல் பாஜக வெற்றி ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/1SruKyG
புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மாநகராட்சி மன்ற தேர்தல் ஜன.30-ல் நடந்தது. ஆம் ஆத்மி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெற்ற இந்த தேர்தலில் 35 பேர் வாக்களித்தனர். மனோஜுக்கு ஆதரவாக ஒரு எம்.பி., 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். குல்தீப் குமாருக்கு ஆதரவாக அந்த கட்சியின் 13, காங்கிரஸின் 7 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரி அனில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவான 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து 16 வாக்குகளை பெற்ற மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக